காரியாபட்டி, மே 4- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ளது மல்லாங்கிணறு பேரூராட்சி. இங்கு 4500 குடியிருப்பு களுக்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகை யில் ரூ.9.90 கோடி மதிப்பில் 3 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணியை தொழில் முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம்தென்ன ரசு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் கூறுகையில், மல்லாங்கிணறு பகுதியில் 4500 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்ட ரூ.9.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம், 1.5 லட்சம் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மற்றும் 60 ஆயி ரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி என மொத்தம் 3 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட உள்ளன என தெரிவித்தார். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 பயனாளிக்கு தொகுப்பு வீடுகளுளை பரா மரித்திட தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ10 இலட்சத்தை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், பேரூராட்சித் தலைவர்கள் துளசி தாஸ் (மல்லாங்கிணறு), திரு.செந்தில்(காரியாபட்டி), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன், பேரூ ராட்சி செயல் அலுவலர் அன்பழகன் உட்பட பலர் பங் கேற்றனர்.