districts

img

அருப்புக்கோட்டையில் கனமழையால் பாதிப்பு; ரூ.3.41லட்சம் நிவாரணம் அமைச்சர் வழங்கினார்

அருப்புக்கோட்டை, ஜூன் 6- அருப்புக்கோட்டை பகு தியில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் வீடு கள் சேதமடைந்து பாதிக்கப் பட்ட 83 குடும்பங்களுக்கு ரூ.3லட்சத்து 41ஆயிரத்து 400 மதிப்பிலான நிவா ரணத் தொகையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் வழங்கினார். அப்போது அமைச்சர் கூறுகையில், அருப்புக் கோட்டை மற்றும் சுற்று வட் டாரப் பகுதிகளில் கடந்த  ஜூன் 4ஆம் தேதி சூறாவளி  காற்றுடன் கன மழை பெய் தது. இதனால் பல வீடுகள் சேதமாகின. மேலும் சாலை யோரங்களில் இருந்த மரங்  கள், மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளும் விழுந்து சேதமாகின.  இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய்த் துறை,  மின்சாரத்துறை, நகராட்சி  நிர்வாகம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சூறாவளி காற்றினால் விழுந்து கிடக்கும் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி களும் முழுவீச்சில் முடிவ டைந்துள்ளது.  இதையடுத்து, தமிழக  முதல்வரின் உத்தரவின் பேரில், சூறாவளிக் காற்று டன் பெய்த கன மழையினால் சேதமடைந்த வீடுகள் கணக்  கிடப்பட்டது. அதனடிப்படை யில் பகுதி சேதம் அடைந்த 82 வீடுகளுக்கு தலா ரூ. 4,100ம், முழு சேதம் அடைந்த வீட்டிற்கு ரூ.5,200- என  பாதிக்கப்பட்ட 83 குடும்பங்க ளுக்கு மொத்தம் ரூ.3,41,400 நிவாரணத் தொகை வழங்  கப்பட்டது என தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது,  மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர்(பொ) அனிதா, நகராட்சி ஆணை யாளர் அசோக்குமார், வட்  டாட்சியர் அறிவழகன் உட் பட பலர் பங்கேற்றனர்.