districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர்களுடன் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்

திருவிதாங்கோடு பேரூராட்சி 12 -வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்  டாக்டர் ஆல்பின் ஜாசி  தோழர்களுடன் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி 20 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜே.அம்பிகா தம்மத்துகோணம் பகுதியில் ஆதரவாளர்களுடன் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி 50 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் கிருஷ்ணபிரசாத், வண்டிகுடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரித்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி 33ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் ஜே.பாஸ்கா மேரி, கோணம் பகுதியில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.