districts

img

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்

திண்டுக்கல், ஜூன் 5- தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விருதலைபட்டி என்ற கிராமத்தில் வாட கைக்கு வீடு எடுத்து குடும்பத்  துடன் வசித்து வந்தார். இவ ரது மனைவியும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். கஞ்சா விற்பதாகக் கூறி  பொன்னுச்சாமியை விசார ணைக்காக கூம்பூர் காவல்  துறையினர் அழைத்துச் சென் றனர்.அப்போது அரவக் குறிச்சி தாலுகா மஞ்சு வெள்ளி ஊராட்சி கடம்பன் குறிச்சி மற்றும் எல்லப்பட்டி  என்ற இடத்தில் வந்து கொண் டிருந்த போது பொன்னுச் சாமி இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றபோது அவ்வழியாக வந்த தனியார் நூற்பாலை தொழிலாளர்களுடன் வந்த வாகனம் மோதியதில் தலை யில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலி யானார் என்று காவல்துறை யினர் தெரிவித்தனர் மேலும் விபத்து நடந்த  இடம் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்ட எல் லைக்கு உட்பட்ட மையப்  பகுதியில் நடந்ததால் பலி யான பொன்னுச்சாமியின் சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த  திண்டுக்கல் மாவட்ட கண்கா ணிப்பாளர் சீனிவாசன் வந்  தார். இப்பகுதியில் வேட சந்தூர் காவல்துறை துணை  கண்காணிப்பாளர், கரூர்  மாவட்ட துணை கண்கா ணிப்பாளர்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.  இந்நிலையில் திண்டுக் கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனி வாசன் திருநெல்வேலிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.