districts

img

நடமாடும் கூழ் தயாரிக்கும் இயந்திரத்தை திண்டுக்கல் ஆட்சியர் துவக்கி வைத்தார்

திண்டுக்கல், மார்ச் 16- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தக்காளி மதிப்புக்கூட்டல் தொடர்பான விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் நட மாடும் கூழ் இயந்திரம் காட்சிப் படுத்தப்பட்டது. இதனை திண்டுக்கல் ஆட்சியர் முனைவர் விசாகன் பார்வையிட்டு, அதன் செயல்பாடு கள் குறித்து கேட்டறிந்தார்.  பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரி வித்ததாவது:- திண்டுக்கல் பகுதிகளில், 5,500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. வீரிய ஒட்டு ரக விதைகள், குறுகிய காலத் தில் கூடுதல் வருவாய் என்ற அடிப் படையில் அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஒரே சமயத்தில் வரத்து அதிகரிக்கும் போது, தக்காளி விலை சரிவை சந்தித்து, விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.  இதனைத் தடுக்க, தக்காளி சாஸ், ஜாம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றவும், பதப்படுத்தும் வசதி மேற்கொள்ளவும் ரூ.40 லட்சம் மதிப்பில் பழங்களை கூழாக்கும் இயந்திரத்துடன் கூடிய வாகனம்  செயல் விளக்கத்திற்கு வரப்பெற் றுள்ளது.  இந்த வாகனத்தில் அமைக்கப் பட்டுள்ள நீராவி இயந்திரம் வாயி லாக, பழங்களை கூழ் போல் வேக வைத்து, பின்னர் குளிர்விக்கப்படு கிறது.

அதற்கு பிறகு, இயந்திரத்தால் அரைக்கப்படுகிறது.  மதிப்பு கூட்டப்பட்ட பொருட்க ளுக்கு ஏற்ப, உப பொருட்கள் பழக்கூழில் சேர்க்கப்பட்டு, பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ய முடியும். தக்காளி மட்டு மின்றி மாம்பழம், பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பழங்களை மதிப்பு கூட் டப்பட்ட பொருட்களாக மாற்றலாம்.  தக்காளி அதிகம் விளையும் காலங்களில் விலை வீழ்ச்சி ஏற் பட்டு, குறைந்த விலைக்கு விவசாயி கள் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தக்காளியை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி, விற்பனை செய்யும்போது, விவசாயி களுக்கு கூடுதல் வருவாய் கிடைக் கும். தக்காளியிலிருந்து, ஜாம் மற்றும் சாஸ் தயாரிக்கலாம். மேலும், கொய்யா, மாம்பழம், பப் பாளி ஆகிய பழங்களையும் பதப் படுத்தி, விலை வீழ்ச்சி ஏற்படும் காலத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களாக மாற்றி விற்பனை செய்ய லாம்.  மேலும் விவசாயிகளின் தோட் டத்திற்கு வந்து, உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் நட மாடும் வாகனமாக உள்ளதால், விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் 1,000 கிலோ தக்காளியை பயன் படுத்தினால் 500 கிலோ தக்காளி பழக்கூழ் கிடைக்கும். இந்த இயந்தி ரம் மூலம் நாள் ஒன்றிற்கு ஒரு டன் தக்காளியை கூழாக்க முடியும்.  இதில் உற்பத்தி, கூழாக்குவது உள்பட எல்லா செலவுகளும் போக ஒரு நாளைக்கு ரூ.6,000 முதல் ரூ. 9,000 வரை லாபம் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசா கன் தெரிவித்தார்.