districts

img

சாலையில் கிடந்த பணம் நகையை உரியவரிடம் ஒப்படைத்த லாரி ஓட்டுநர்

நத்தம், பிப்.23- திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சிவராத்திரியன்று மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டிக்கு குலதெய்வ கோவிலுக்குச் சென்றுவிட்டு தனது காரில் நத்தம் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது மதுரை ரோட்டில் உள்ள நத்தம்-பள்ள பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, காரின் மேலே இருந்த சூட்கேஸ் தவறி சாலையில் விழுந்தது. இதை கவனிக்காமல் செந்தில் சென்றுவிட்டார்.  அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து திருச்சிக்கு லாரி ஓட்டிச்சென்ற அலங்காநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சாலையில் கிடந்த சூட்கேஸை நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து செந்திலுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதன்பேரில் நத்தம் காவல் நிலையம் வந்த செந்தில்  பொருட்களை பெற்றுக்கொண்டார். மேலும் பொருட் களை ஒப்படைத்த லாரி ஓட்டுநர் ரமேஷ்க்கு நன்றி தெரி வித்தார்.