சிவகங்கை, ஜூன் 24- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழுத்தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் தி.வேல் முருகன் (பண்ருட்டி தொகுதி) தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், முன்னிலை யில் குழு உறுப்பினர்கள் சிவ கங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் நடை பெறும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து களஆய்வு மேற்கொண்ட னர். பின்னர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பி னர் மாங்குடி ஆகியோர் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத்தலைவர் தி.வேல்முருகன் தெரிவிக்கையில், சட்டமன்ற பேர வையில் தமிழ்நாடு முதலமைச் சர், அமைச்சர்கள் ஆகியோர் அறி விக்கும் திட்டங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் வினாக் கள் அதனடிப்படையில் அறிவிக் கப்படும் திட்டப்பணிகள் ஆகி யவை உறுதிமொழியாக கருதப் படுகிறது. இந்த உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களின் பங்கு மிக முக்கி யமானதாகும்.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.01.95 கோடி மதிப் பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவகங்கை பேருந்து நிலையம் புனரமைக்கும் பணிகள் குறித்தும், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டுள்ள குண்டூரணி புனரமைக்கும் பணிகள் குறித்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறையின் சார்பில் சிவ கங்கை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட் டுள்ள 180 இருக்கை வசதிகள் கொண்ட கேலரி வகை விரிவுரை அரங்கம் தொடர்பாக ஆய்வு மேற் கொண்டு, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணாக்கர்களிடம் மேம்படுத்த வேண்டிய கூடுதல் வச திகள் குறித்து கலந்துரையாடப் பட்டது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, மருந்தகம், தாய் சேய் நலப்பிரிவு ஆகியவை களின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவமனைக்கு வருகை புரி யும் நோயாளிகளின் வருகைப் பதி வேடு ஆகியனக் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்புவனம் வட்டத்திற்கு உட்பட்ட கீழடி அருங்காட்சியகத் தில், மேம்படுத்த வேண்டிய வசதி கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
அதில், கீழடியில் சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் அமைப்பதற்கென ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள அரசால் அறிவிக்கப் பட்டதன் அடிப்படையில், அகழ் வைப்பகத்தின் ஒரு பகுதியில் சிறப்பு நூலகம் ஒன்று அமைப்ப தற்கான பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பல் வேறு துறைகளின் சார்பில் மொத் தம் ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் தொடர் பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சட்டமன்ற பேர வையின் இணைச் செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் ரவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனை வர்.சிவராமன் மற்றும் சிவ கங்கை நகர் மன்றத் தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூ ராட்சித் தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் உள் ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதி கள், அனைத்துத்துறை அரசு முதல் நிலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.