சேலம், ஜன.28- சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பாரம் பரிய ஜல்லிக்கட்டு போட்டி சனியன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு விதி முறைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பின்பற்ற வேண்டிய உறுதிமொழி களை மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வாசிக்க, மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களும், கரோனா பரி சோதனையில் தொற்று பாதிப்பு இல்லா தவர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு கால்நடை மருத்துவத் துறை சார்பாக பரிசோ தனை செய்யப்பட்ட பின்னர் அனு மதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 12 சுற்றுகள் நடைபெற்றது. அதில் முதல் சுற்றில் உள்ளூர் கோவில் காளையை அவிழ்த்துவிட்ட பின்னர் மற்ற காளை களை அவிழ்த்துவிட தொடங்கினர். அதன்பிறகே சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடித்து அடக்கினார். மேலும், இந்த போட்டியில் 650 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் க லந்து கொண்டனர். மேலும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழு சார்பில் பீரோ, கட்டில், சைக்கிள், மின் விசிறி, குக்கர், வெள்ளி காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப் பட்டன. இந்த போட்டியில் ஒரு மாடுபிடி வீரர் காயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்த ஜல்லிக்கட்டை காண்ப தற்கு ஆத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பார்வை யாளர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில், வனவிலங்கு நல வாரிய உறுப்பினர் மெட்டல் பங்கேற் றார். சேலம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சிவகுமார் தலைமையிலான 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.