districts

img

தரமற்ற முறையில் அமைத்த சாலை: பல முறை சீரமைக்கும் நெடுஞ்சாலை துறை

அவிநாசி, பிப்.7– அவிநாசி அருகே வெள்ளியம்பாளை யம், நம்பியம்பாளையம் உள்ளிட்ட பகுதிக ளில் தரமற்ற முறையில் சாலை அமைத்த தால், தொடர்ச்சியாக  சீரமைக்கும் பணி யில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட, வெள்ளியம்பாளையம் அரசு பணியாளர் நகர் முதல் பேருந்து நிறுத் தம் முன்பு வரை நெடுஞ்சாலைத்துறை சார் பில் சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை  அமைக்கப்பட்டது. அதேபோல நம்பியம்பா ளையம் பகுதிகளிலும் சாலைப்பணி நடை பெற்றது. இப்பகுதிகளில், தரமற்ற முறை யில், கற்களின் மீது தாரை ஊற்றி சாலை போடப்பட்டதால், சாலை போடப்பட்ட இரண்டு நாட்களில் பல இடங்களில் சாலை விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனை சீர மைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை யினர் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, சீரமைக்கப்பட்ட சாலை, மீண்டும்  விரிசல்விடத் தொடங்கி யுள்ளது. எனவே, உடனடியாக மாவட்ட  நிர்வாகம் சாலையை ஆய்வு செய்து ஒப்பந்த தாரர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சரியான முறையில் சாலை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.