பாலக்காடு, அக்.26- கேரளாவில் தற்போது குடியரசுத் தலை வர் ஆட்சி நடக்கவில்லை என்பதை ஆளுநர் நினைவில் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜயராக வன் கூறினார். சிபிஎம் கோங்காடு லோக்கல் கமிட்டி அலுவலகமான வேம்பன் நினைவிடத்தை அவர் திறந்து வைத்து பேசுகையில், கேர ளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜன நாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டுக்கே முன்னுதாரணமான மாற்றுக் கொள்கைகளை பினராயி அரசு செயல் படுத்தி வருகிறது. ஆனால் ஆளுநர் கேரள மக்களுக்கு சவால் விடுகிறார். அரசாங் கத்தின் நல்ல பணிகளுக்கு இடையூறு விளைவிக்க ஒரு ஆளுநர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார். இது ஆபத்தானது. ஆனால், ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்க் கட்சித் தலைவரும், கேபிசிசி தலைவரும் ஆதரிக்கின்றனர். இவர்கள் இருவரும் மற்ற மாநிலங்களில் கட்சிதாவிய காங்கி ரஸ் தலைவர்களின் பாணியை பின்பற்றி வருகின்றனர். இவர்களுக்கு காங்கிர ஸுக்குள் முழு ஆதரவு கிடைக்காதது ஆறுதல். நாடாளுமன்றம் அமைதியாக்கப்பட்டு விட்டது என்பதுதான் பாஜக ஆட்சியின் முக்கிய சாதனை. ஆர்.எஸ்.எஸ் என்ன சொல்கிறதோ அதைத்தான் நாடாளு மன்றத்தில் செயல்படுத்துகிறார்கள். எதிர்க் குரல்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எதிர் கருத்து கூறுகிறவர்களை இடைநீக்கம் செய்வதே புதிய நாடாளுமன்ற நடை முறை. ஏ.கே.ஜி.யின் நாடாளுமன்ற உரை யை உன்னிப்பாகக் கேட்ட நேரு என்ற பிரதமர் இருந்த நாட்டில் நாடாளுமன்றம் அமைதியாக்கப்படுகிறது என்றார் விஜய ராகவன்.