மதுரை, ஜூலை 19- 13 பல்கலைக்கழகங்களின் எதிர்காலம்...? 500-க்கும் மேற்பட்ட பாடத் திட்டக்குழுக்களின் கதி...? என்ன பல்க லைக்கழகப் பேராசிரியர்கள் கூட்டுநட வடிக்கைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து குறித்து மதுரையில் புத னன்று செய்தியாளர்களிடம் பேசிய மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்க லைக்கழகக் கல்லூரி ஆசிரியர்கள், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்க ளின் கூட்டமைப்பான கல்லூரி ஆசிரி யர்கள் கூட்டு நடவடிக்கைக்கு ஒருங்கி ணைப்பாளர் மு.நாகராஜன், ” தமிழகம் முழு வதும் உள்ள கல்லூரிகளில் பொதுவான புதிய பாடத்திட்டம் என்ற பெயரில் 13 பல்க லைக்கழகங்களிலும் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட பாடத்திட்டக் குழுக்களை வெறும் கையெழுத்திடும் அமைப்பாக மாற்றி உள்ளது. இதனால், பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து செயல்படுமா? இல்லையென் றால் அனைத்தும் கலைக்கப்படுமா? என்ற ஐயத்தை தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் உயர் கல்வி சராசரி யில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அதற்குக் காரணங்கள், இப்போது நடை முறையில் உள்ள பண்முகத் தன்மை கொண்ட பாடத்திட்டம். கல்வியில் ஆசிரி யர்கள், கல்வியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயகம் மட்டுமல்ல பல்கலைக்கழ கங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் மற்றும் கருத்துரிமை ஆகும். இப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அதன் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரி களுக்குமான பொதுவான புதிய பாடத்திட் டம் ஒன்றை தமிழ்நாடு மாநில கல்வி மையம் திணிக்க முயற்சி செய்கிறது. தமிழ்நாடு அரசு, நம் மாநிலத்திற்கு என்று தனி மாநில கல்விக் கொள்கையை உருவாக்கக் குழு அமைந்து உள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை இன்னும் வெளி வராத நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்ற தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் செயல்பாடுகள் எந்த விதத்திலும் சரியில்லை.
தேசிய கல்விக் கொள்கையை எவ்வாறு எதிர்க்கிறோமோ அதே வீரியத்தோடு அதற் கான பாதை அமைக்கும் மாநில முழு மைக்குமான இந்த ஒரே மாதிரி பாடத் திட்டத்தையும் எதிர்க்கிறோம். ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தமிழ்நாடு மாநில கல்வி மன்றத் துணைத்தலைவர் “நாங்கள் அனுப்பியது. வெறும் மாதிரி பாடத்திட்டம் தான். பொதுப்பாடத்திட்டம் இல்லை. அந்த மாதிரி பாடத்திட்டங்களை பல்கலைக்கழ கங்கள் ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அந்தந்த பல்கலைக்கழகங்களின் உரிமை. நாங்கள் யாரையும் ஒருபோதும் கட்டாயப் படுத்தவில்லை” எனக் கூறினார். ஆனால், அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், உண்மைக்குப் புறம்பாக தமிழ்நாட்டில் “ஒரே பாடத்திட்டம்” அமல் படுத்தப்பட்டு விட்டதாகவும், கல்வியா ளர்கள் வரவேற்பதாகவும் உயர் கல்வி மன் றம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் திணிக்கப்பட்ட “பொதுப் பாடத்திட்டத்தை” திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். ஜூலை 21-ஆம் தேதி பல்கலைக்கழகங்கள் முன்பு வாயில் முழக்கப் போராட்டம் நடைபெறும் அதைத் தொடர்ந்து ஜூலை 25-ஆம் தேதி அன்று தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தில் “பய ணப்படியைத்திருப்பி வழங்கும் போராட் டம் நடைபெறும் என்றனர். பேட்டியின்போது போராட்டத்திற்கு இ.பி.ஞானேஸ்வரன், மூட்டா தலைவர் ஏ.டி.செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.