இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 17,18 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு மண்டபம் கலோனியர் பங்களா அருகில் விழா நடைபெறும் இடத்தை தமிழக நிதி-மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் ஆகஸ்ட் 12 சனிக்கிழமையன்று பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.