திண்டுக்கல் மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதி கமான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறார்கள். இவர்களில் மன வளர்ச்சி குன்றியவர்களும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களும் அடக் கம். மனநலம் பாதிக்கப்பட்டவர் களை வீட்டில் உள்ளோர் பராம ரிக்க முடியாமல் காப்பகங்களில் சேர்க்கின்றனர். சிலர் பழனி போன்ற இடங்களில் தெருக்களில் ஆதர வற்றவர்களாக விட்டுச் செல்கின்ற னர். தெருக்களில் விடப்படுவோரும், உறவினர்களால் காப்பகங்களில் சேர்க்கப்படுவோருக்குமாக திண் டுக்கல் மாவட்டத்தில் மனநிலை மற்றும் மனவளர்ச்சி குன்றியோ ருக்கான காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த காப்பகங்கள் அனைத்தும் அரசின் அனுமதி பெற்று பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஆனால், திண்டுக்கல் மாவட் டத்தில் உள்ள பெரும்பாலான காப் பகங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே குறிக் கோளோடு அரசின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் காப்பகங்களில் பரா மரிக்கப்படும் மாற்றுத்திறனாளி களுக்கு சரியாக உணவு வழங்கா மலும், சுகாதாரமான உடை அணி விக்காமலும், காப்பகங்களை தூய் மையாக பராமரிக்காமலும், முறை யான மருத்துவ வசதி செய்து கொடுக்காமலும், விடுதிக்காப்பா ளர் இல்லாமலும் செயல்பட்டு வரு கின்றன.
கடந்த 28.02.23 அன்று திண்டுக் கல் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த பாண்டித்துரை என்னும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திற னாளியை அவரது பெற்றோர் திண்டுக்கல் மா.மூ.கோவிலூர் பிரிவில் உள்ள அம்மா இல்லம் என்னும் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். காப் பகத்தில் சேர்க்கப்பட்ட ஆறாவது நாள் 6.3.2023 அன்று காலை காப்ப கத்தில் இருந்து தங்களது மகன் காணாமல் போய்விட்டதாக பாண் டித்துரையின் பெற்றோருக்கு காப் பகத்தில் இருந்து தொலைபேசி மூலமாக காலை 7.30 மணியளவில் தகவல் தெரிவித்துள்ளனர். காப்ப கத்தில் இருந்து தகவல் வந்ததை அடுத்து பாண்டித்துரையின் பெற் றோர் காப்பகத்தில் சென்று விசா ரித்துவிட்டு திண்டுக்கல் நகரம் முழு வதும் இரண்டு நாட்களாக தேடி யும் பாண்டித்துரை சம்மந்தமான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 08.03.23 அன்று மாலை சிலுவத்தூர் சாலை வன்னி யபட்டி செட்டிகுளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக வாட்ஸ் அப்பில் வந்த தகவலை அடுத்து பாண்டித் துரையின் பெற்றோர் சென்று பார்த்தபோது அது தங்களது மகன் தான் என்பது உறுதி செய்யப்பட்டு 9.3.23 அன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றையதினமே உடல் எரியூட்டப்பட்டுள்ளது. மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி யை அம்மா இல்லத்தை சேர்ந்த காப்பக நிர்வாகிகள் சரிவர கவ னிக்காமல் விட்டதன் விளைவாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. இதே அம்மா இல்லத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல் ஒரு மாற்றுத்திறனாளி காணாமல் போனதும், மூன்று நாட் கள் தேடுதலுக்கு பிறகு அதே காப் பக வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டதும் அப்போதும் காப்பக நிர்வாகிகள் இதை மூடிமறைக்க முயற்சித்த தும் நடந்தது.
அதேபோல் கடந்த ஏழு மாதங்க ளுக்கு முன்னதாக நிலக்கோட்டை யில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்து பெண் ஒருவர் காணாமல் போனதும், மூன்றுநாட்கள் தேடு தலுக்குப் பிறகு அந்த காப்பகத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்ட தும் பின்னர் யாருக்கும் தெரியாமல் பல்வேறு காரணங்களைக் கூறி அதுவும் மறைக்கப்பட்டது. இந்த மரணங்களை ஒட்டி எங்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மனநல காப்பகங்க ளையும் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என சொல்லப் பட்டுள்ளதே. அது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? மாதந் தோறும் நடைபெறும் ஆய்வில் உணவு சரியாக அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும் உணவின் தரம் குறித்தும் உணவுப்பாதுக்காப்பு துறை மூலமாக ஆய்வு செய்யப் பட்டதா? மாதந்தோறும் மருத்துவர் களைக் கொண்டு அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட் டதா? அனைத்து காப்பகங்களிலும் கட்டாயம் சிசிடிவி கேமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? 24 மணி நேரமும் வார்டனும், காவல ரும் பணியில் இருப்பது உத்தர வாதம் செய்யப்பட்டுள்ளதா? இப் படி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம். பாண்டித்துரை இறந்த காப்ப கத்தில் அன்றைய தினம் மட்டும் ஏன் சிசிடிவி கேமராவில் உள்ள பதிவு கள் காணாமல் போனது? பாண்டித் துரை காணாமல் போனவுடன் ஏன் காவல்துறையில் புகார் அளிக்க வில்லை? பின்வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து போய்விட்டான் என சொல்லும் நிர்வாகம் ஏன் இந்த பாது காப்பு குறைபாட்டை கவனிக்க தவ றியது?
இப்படி திண்டுக்கல்லும் விழுப் புரம் அன்புஜோதி ஆசிரமம் போல் மாறிவிடுமோ என்கிற அச்சம் எங்க ளுக்கு எழுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் உடனடியாக மாவட் டம் முழுவதும் உள்ள அனைத்து காப்பகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும், விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் அனைத்து காப்பகங்களையும் இழுத்து மூட வேண்டும். அம்மா இல்லத்தில் சேர்க்கப்படும் மாற்றுத் திறனாளி களின் பாதுகாப்பு கேள்விக்குறி யாக உள்ளதை கவனத்தில் கொண்டு உடனடியாக அம்மா இல்லத்தை இழுத்து மூடவும், அங்கு பராமரிக் கப்படும் அனைத்து குழந்தைகளை யும் பாதுகாப்பான வேறு இடத் திற்கு மாற்றவும், பாண்டித்துரை இறக்க காரணமாக இருந்த அம்மா இல்லத்தை நிர்வகிக்கும் அனைவர் மீதும் குற்றவியல் வழக்கு பதிந்து கைது செய்யவும், மகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தா ருக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேற் கண்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க தவறினால் திண் டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்லா யிரக்கணக்கான மாற்றுத்திறனாளி களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு மாற்றுத் திறனாளிகள் தள்ளப்படுவார்கள்.
-எஸ்.பகத்சிங்
திண்டுக்கல் மாவட்டச் செயலாளர், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள்- பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்