districts

img

உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து மீறும் தனியார் கல்குவாரி நிர்வாகம்

அருப்புக்கோடை, ஜூன் 18- அருப்புக்கோட்டை அருகே உயர்நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தி கண்மாய் கரையில் கனரக வாகனங்களை தனியார் கல்குவாரி நிர்வாகத்தினர் இயக்கி வருகின்றனர். இந்  நிறுவனத்தின் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட  பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அருப்புக்கோட்டை ஒன்றியம்,  புலியூரான் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னி குண்டு  கண்மாய் கரையிலும் நீர்வரத்து ஓடையிலும்  கன ரக வாகனங்கள் செல்லக்  கூடாது என ஏற்கனவே, சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட் டுள்ளது. மேலும், மாவட்ட  ஆட்சியர், அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர், அருப்புக்கோட்டை ஊரா ட்சி ஒன்றிய அலுவலர் ஆகி யோரும் கண்மாய் கரை  மற்றும் நீர்வரத்து ஓடை வழி யாக கனரக வாகனங்கள் செல்லக் கூடாது என  உத்தர விட்டுள்ளனர். ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளின் உத்தர வையும்  மீறி முருகன் கல்  குவாரி நிர்வாகத்தின் கன ரக வாகனங்களை  நீர்வரத்து ஓடையிலும் பன்னிக்குண்டு  கண்மாய் கரையிலும் இயக்கினர். இதனைய டுத்து,  புலியூரான் கிராம  பொதுமக்கள் மற்றும் இளை ஞர்கள் கனரக வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். தகலறிந்து விரைந்து வந்த திருச்சுழி காவல்துறையினர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு, நீதிமன்ற உத்தரவை மீறிய கல்குவாரி நிறுவ னத்தினரை எச்சரித்து வாக னங்களை திருப்பி அனுப்பி னர். இதையடுத்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.