districts

img

பூசாரிபட்டியில் புதிய பள்ளிக்கட்டிட கட்டுமானப்பணி துவங்கியது

மதுரை, ஜன.10- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட் டம், கருமாத்தூர் உள்வட்டம்,கருமாத்தூர் கிராம உட்கடை பூசாரிபட்டி கிராமத்தில்  உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  இடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகிவிட் டது. இதனால் பள்ளி மாணவ,மாணவிகள் போதிய இடவசதியின்றி கல்வி கற்பதில் பெரும் அவதிப்பட்டனர்.  புதிய பள்ளிக்கட்டிடம் கட்டித்தரக்கோரி   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிராம மக்களுடன் இணைந்து ஜனவரி 10  அன்று சாலை மறியல் போராட்டம்  நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இத னைத்தொடர்ந்து ஜனவரி 9 அன்று உசி லம்பட்டி வட்டாட்சியர் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார கல்வி  அலுவலர் கருமாத்தூர் காவல் சார்பு ஆய்  வாளர், கருமாத்தூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கருமாத்தூர் கிராம நிர்வாக  அலுவலர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப் பட்டன.

பூசாரிபட்டி கிராமத்தில் புதிய பள்  ளிக்கட்டிடம் கட்ட ரூ.30 லட்சத்து 82 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு ஜனவரி 10 அன்று கட்டு மானப்பணிகள் துவங்கப்பட்டன. பூசாரிபட்டி கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டிட இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமி ருந்து மீட்டு, புதிய கட்டிடம் கட்டுவது என்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள சாக்கடையை புனரமைப்பது . புதிய  பள்ளிக்கட்டிடத்தில் கழிவறை,புத்தகங்கள் வைப்பதற்கான செல்புகள், போதிய வகுப்  பறைகளை நன்கு கட்டித்தர வேண்டும். பள்ளி கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்ட குழுவில் தற்போது பள்ளியில் செயல்படும் பள்ளி மேலாண் மைக்குழுவில் ஒருவரை இணைத்து குழு  அமைக்க வேண்டும். கட்டிட பணி நடை பெறுவது குறித்து தகவல் பலகை வைக்க  வேண்டும் என்று  முடிவு எடுக்கப்பட்டது. இதன்பின்னரே போராட்டம் தற்காலிக மாக வாபஸ் பெறப்பட்டது.  இந்த பேச்சு வார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்மபட்டி  ஒன்றியச் செயலாளர்  வி.பி.முருகன், மாவட்  டக்குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப் பாண்டி,  ஒன்றியக்குழு உறுப்பினர் சீ.குரு சாமி ,வடக்கம்பட்டி கிளைச் செயலாளர் ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு  உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.