districts

img

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்ட கலந்தாய்வுக் கூட்டம் : விருதுநகர் நகராட்சி கூட்டத்திற்கு முன் தயாரிப்பின்றி வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி

விருதுநகர், ஜூலை 22- விருதுநகர் நகராட்சியில்புதிய தாமிபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி, நகர் மன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்வி களுக்கு உரிய பதில் ஏதும் கூறவில்லை.  இதனால், உறுப்பினர்கள் பலர் எரிச்ச லடைந்து கூட்டத்தை விட்டு வெளி யேறினர். புதிய தாமிபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக்  கூட்டம் நகராட்சி தலைவர் ஆர்.மாத வன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் தட்சணாமூர்த்தி, பொறி யாளர் மணி, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற் பொறியாளர் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு: தங்கள் பகுதியில் பிரதான குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை  சரியாக மூடவில்லை. இதனால், வயோ திகர்கள் கீழே விழுகின்றனர். சரி செய்யக் கோரி பலமுறை தெரிவித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லையென உறுப்பி னர் ராமலட்சுமி புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த உதவி செயற் பொறியாளர், இனி வரும் காலங்களில் பிரச்சனை இன்றி சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

செந்திவிநாயகபுரம் தெரு பகுதி யில் குழாய்கள் பதிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இணைப்பு ஏன்? வழங்கவில்லையென உறுப்பினர் பேபி கேள்வி எழுப்பினார்.  ஒரு வாரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும் என உதவி செயற் பொறியாளர் தெரிவித்தார். நகர்மன்ற உறுப்பினர்களிடம் எவ்வித தகவலும் கூறாமல், குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. அதிலும் 2 அடி ஆழத்தில் தான் குழாய் கள் பதிக்கப்படுகின்றன என உறுப்பினர் ராஜ்குமார் புகார் தெரிவித்தார். நகராட்சியில் இருந்து குழாய் பதிக்கும் பணியை யாரும் பார்வையி டுவதில்லையா? என உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில ளித்த பொறியாளர், தான் பார்வை யிடுவதாக தெரிவித்தார். இப்பணிக்கான திட்ட மதிப்பீடு எவ்வளவு? எத்தனை நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும்? எத்தனை இணைப்புகள் வழங்கப்படும்?என உறுப்பினர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு, வரும் டிசம்பர் மாதத்திற்குள் இப்பணியை முடிப்ப தாக கால நீட்டிப்பு கோரி கடிதம் எழுதி அனுப்பியுள்ளோம் என உதவி செயற்பொறியாளர் பதில் கூறினார்.   குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரியை கூட்டத்திற்கு வரச் சொல் லுங்கள். கீழ் மட்ட அலுவலர்களை வைத்து கூட்டம் நடத்துவது முறை யல்ல என உறுப்பினர் மதியழகன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், அடுத்த நகர்மன்றக் கூட்டம் நடை பெறும் நாளில், உயர் அதிகாரிகள், பவர் பாயின்ட் மூலம் திட்டம் குறித்து விளக்கும் வகையில் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, உறுப்பினர்கள் அனைவரும் இதை ஏன்? முதலி லேயே செய்யவில்லையென எரிச்சலு டன் கூட்ட அரங்கை விட்டு வெளியேறி னர்.