districts

சிவகாசியில் 33.5 கி.மீ தூரச் சுற்றுச்சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும்

விருதுநகர், டிச.23-  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சுற்றுச் சாலை அமைக்க 33.5 கி.மீ தூரத்தற்கு நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் சாலைக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். விருதுநகரில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் நடை பெற்றது. இதில், பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ.வேலு, வரு வாய்த்தறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டம் நிறைவடைந்ததும் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : விருதுநகர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 10 கி.மீ,  மாநில நெடுஞ்சாலை 358 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை கள் 204 கி.மீ, மாவட்ட இதர சாலைகள் 1244 கி.மீ என மொத்தம் 1916 கி.மீ சாலைகளை தமிழக அரசின் சார்பில் விரிவுபடுத்துவது, உறுதிப்படுத்துவது மேம்படுததுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டியல் 133 கி.மீ சாலை 112 கோடி திட்டமதிப்பீடு தயார் செய்யப் பட்டு 98 இடங்களில் பணிகள்நடைபெற்றுக் கொண்டிருக்கி றது. நிகழாண்டிடில் 75 கோடி மதிப்பீட்டில் 53 கி.மீ சாலை கள் மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இருக்கண்குடி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை புரிகின்றனர். எனவே, ரூ.30 கோடி  செலவில் பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. திருவில்லிபுத்தூர் அருகே திரு வண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல  2 கி.மீ தூரத்திற்கு ரூ.5 கோடி செலவில் பாதைகள் அமைக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 33 தரைப்பாலங்கள் உயர் மட்ட பாலங்களாக மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. நிகழாண்டில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 17 உயர்மட்டப் பாலங்கள் கட்டும் பணி நடைபெற உள்ளது. ஏற்கனவே, கடந்த ஆட்சியில் பிபிஎம்சி என்ற திட்டம் இருந்தது. இந்த ஆண்டு அத்திட்டம் சரிவர நிறைவேற வில்லை. எனவே, இதற்காக 80 கி.மீ தூரத்திற்கு புதிய சாலைகள் ரூ.51 கோடி செலவில் போடப்படும். அருப்புக்கோட்டையில் ரூ.35 கோடிமதிப்பீட்டில் புற வழிச்சாலை அமைக்கும் பணியானது  துவங்கும் நிலை யில் உள்ளது. திருவில்லிபுத்தூர்-சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை,  திருச்சுழி, நரிக்குடி, வழியாக  பார்த்திபனூர் வரை செல்லும் சாலைப் பணிகள்  நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்காக கோவிலாங்குளம், கோபாலாபுரம், பாலையம்பட்டி, புளியம்பட்டி, அருப்புக் கோட்டை நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

விருதுநகரிலிருந்து சிவகாசிக்கும் அங்கிருந்து பிற ஊர்களுக்கும் எளிதில் செல்லும் வகையில்  வட்டப்பாதை அமைக்கும் பணிக்காக 33.50 கி.மீ நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இராஜபாளையத்தில் ரூ.46 கோடி யில்  ரயில்வே மேம்பாலம் கடடும்  பணிகள் நடைபெற்று வருகிறது.  திருவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் 23.25 கோடி மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவுடையாபுரம் ரயில்வே கேட்டில்  மேம்பாலம்  விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என இரு அமைச்சர்க ளும்  கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, அதற்கான ஏற்பாடு கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.   விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய இடங்க ளில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு ஐ.டி.ஐ கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் ஆலோ சனைப்படி, அரசு ஐ.டி.ஐ களில் புதிய தொழில்நுட்பங் களைக் கொண்டு புதிய பாடத்திட்டங்களில் புதிய பிரிவுகள் துவங்கப்படவுள்ளன. விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட வளாகம் கட்டும் பணி 2024 மார்ச் இல் முடிக்க வேண்டும். ஆனால், நாங்கள்  ஆய்வு செய்த போது பார்த்தால், ஒப்பந்தகாரர் மிக வேகமாக அப்பணிகளை செய்து வரு கிறார். எனவே,  6 மாத காலத்திற்கு முன்பே கட்டிப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விடும் நிலை உள்ளது. இந்த கட்டிடத்தில் 40 துறைகளைச் சார்ந்த  அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில், 4 மின் தூக்கிகள் அமைய உள்ளன. மேலும், 4 சக்கர வாகனங்கள், இரு சக்கச வாகனங்கள நிறுத்தும் இடம் ஆகியவை அங்கு அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? என்ற கேள்விக்கு? நெடுஞ்சாலைத்துறையில் கடந்த  அரசாங்கம் போகும் போது ரூ.6லட்சத்து 25 ஆயிரம் கோடி  கடன் வைத்து விட்டு போனார்கள். அன்றாடஅரசை நடத்துவது, புதிய புதிய திட்டங்களுக்கு நிதிகளை ஒதுக்குவது என்பது தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்து கட்டமாக ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளன என முதல்வர் கேட்டுள்ளார். அவரிடம் நாங்கள் காலிப் பணியிடங்கள் குறித்த விபரங்களை வழங்கியுள்ளோம்.   ஒவ்வொன்றாக அப்பணியிடங்களை நிரப்பி வருகிறோம். அதற்காக எந்தப் பணியும் தற்போது  வரை நின்று விடவில்லை. இருக்கின்ற அலுவலலர்களை வைத்துக் கொண்டு  சாலைப் பணியாளர்களைக் கொண்டு பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. வருங்காலங்களில் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை  பராமரிப்பு பணிகள் கடந்த ஆண்டில் தனியாரிடம் விடப்பட்டிருந்தது. வரும் ஜூலை.,18 இல் அப்பணி நிறைவடைய உள்ளது.

தனியார் மூலம் பராமரிப்பு பணி கிடையாது 

தேர்தல் அறிக்கையில் பேக்கேஜ் திட்டத்தை ஒழிப்போம் என்றோம். அதை ஒழித்து விட்டோம். இந்த மாவட்டத்தில் நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் தனியாரிடம் 2023 வரை ஒப்பந்தம் உள்ளது. ஏற்கனவே, அரசாணை மூலம் தனியார் மூலம் பராமரிப்பு பணிகள் கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் தனியார் மூலம் பராமரிப்பு பணிகள் இனிமேல் இருக்காது  என தெரிவித்தார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு? இந்தக் கோரிக்கை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது  அல்ல. 10 ஆயிரம் சாலைப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சியில் தான் வேலை கொடுத்தோம். ஆனால், அதிமுக ஆட்சியில் அவர்களை பணி நீக்கம் செய்தார்கள். அவர்க ளுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அரசு விதிகளின் படி அனைத்து சலுகைகளும் வழங்கப் பட்டு வருகிறது.  அவ்வாறு இருக்கும் போது, 41 மாதம் வேலை இன்றி வீட்டில் இருந்ததற்கு எப்படி சம்பளம் வழங்குவது.  இக்கோரிக்கை குறித்து, நிதித்துறையில் கேட்டுப் பார்த்தேன்.

 ஆனால், அவ்வாறு வழங்க  சட்டத்தில் இடம் இல்லை என தெரிவித்து விட்டார்கள். இது ஒரு முன் உதார ணம் ஆகி விடும் எனவும் கூறி விட்டார்கள். இதுகுறித்து பலமுறை சாலைப் பணியாளர்கள் சங்க பிரதிநிதிகளிடம் விளக்கம் அளித்து விட்டேன் என தெரிவித்தார்.   முன்னதாக, விருதுநகர் அருகே ரூ.7.31 கோடியில் செய்து முடிக்கப்பட்ட 4.7 கி.மீட்டர் நீளமுள்ள ஆவுடை யாபுரம் - கோட்டூர் சாலைப்பணிகளை  அமைச்சர் ஆய்வு செய்தார். பின்பு, அச்சாலையருகே மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன்( விருதுநகர்), அசோகன்( சிவகாசி), ரகுராமன்( சாத்தூர்), தங்கப்பாண்டி (இராஜபாளையம்), மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்ற னர்.