districts

img

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கம் இன்று முதல்வர் திறந்து வைக்கிறார்

தூத்துக்குடி,டிச. 1 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ரூ.150 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நினைவரங் கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்  வியாழனன்று (01.12. 2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது: தமிழ்நாடு முதலமைச் சர், கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயண னுக்கு கோவில்பட்டியில் நினைவரங்கம் அமைக் கப்படும்  என்று அறிவித்தார். அதனடிப்படையில் கோவில் பட்டியில் ரூ.150 இலட்சம் மதிப்பில்  புதிதாக கட்டப் பட்டுள்ள நினைவரங்கம் அழகிய புல்வெளிகளுடன் டிஜிட்டல் நூலகம்,  நிர்வாக அறை, நூலகம், கற்சிலை, கண்காட்சி மற்றும் முழு வுருவ  வெண்கலச்சிலையு டன் கட்டி முடிக்கப்பட்டுள் ளது.  நினைவரங்கம் மற்றும்  முழுவுருவச்சிலை தமிழ் நாடு முதலமைச்சரால் நாளை  (02.12.2022) காலை திறக்கப்படவுள்ளதால் இன்று(வியாழன்)  ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரால் நினைவ ரங்கம் திறந்து வைக்கப்பட்ட வுடன்  பொதுமக்களின் பயன் பாட்டுக்கு கொண்டு வரப் படும். 

கோவில்பட்டியிலும் புத்தகத்திருவிழா

தூத்துக்குடி நாடாளு மன்ற உறுப்பினர் முயற்சி யால் மணிமண்டபத்தில், கி.ராஜநாராயணன் பயன் படுத்திய பொருட்கள் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்டு பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டு வைக் கப்படும். நினைவரங்கத்தில் உள்ள நூலகத்தில் அவர் எழுதிய புத்தகங்கள்  அனைத்தும் வைக்கப்படும். அதுமட்டுமல்லாமல்கு.அழகிரிசாமி, சோ.தர்மன்  உள்ளிட்ட கரிசல் இலக்கிய வாதிகளின் புத்தகங்களும் படிப்பதற்காக வைக்கப் படும்.  மேலும் டிஜிட்டல் அரங் கில் கி.ரா. அவர்களின் புத்த கங்கள் அனைத்தும் படிப்ப தற்கும்,  காட்சிக்கும் வைக் கப்படும். கோவில்பட்டியில் 17க்கும் மேற்பட்ட எழுத்தா ளர்கள் இருக்கிறார்கள். சாகித்ய அகாடமி விருது பெற்ற 5 எழுத்தாளர்கள் உள்ளனர். எனவே  கோவில் பட்டியிலும் புத்தக திருவிழா  நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் தெரிவித்தார். ஆய்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர்  மகாலெட்சுமி,  பொதுப் பணித்துறை செயற்பொறி யாளர் கட்டடம் மற்றும் பரா மரிப்பு தம்புரான் தோழன், உதவி செயற்பொறியாளர் பரமசிவம், கோவில்பட்டி வட்டாட்சியர் சுசீலா, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர்  கருணாநிதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

;