districts

img

தான் படித்த பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய மணமக்கள்

மயிலாடுதுறை, பிப்.19-  மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் கிளி யனூரில் உள்ள ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் படித்த அகரபள்ளம் கிரா மத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாண வர்கள் ஒன்றிணைந்து “அகர விடியல்” என்ற சேவை அமைப்பை தொடங்கி ஏழை  மக்களுக்கு பல்வேறு நல  உதவிகளை செய்து வரு கின்றனர்.  அகர விடியல் சேவை அமைப்பை சேர்ந்த முன்னாள்  மாணவரான மாதவனின் திரு மணம் திங்களன்று (பிப்.14) நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, அவர் மணமகள் தரணியை அழைத்துக் கொண்டு, கிளியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று, தற்போது அங்கு படிக்கும் மாணவர்களுக்கு எழுது பொருட்களை வழங்கினார். மணமகன் மாதவனின் நண்பர்களான பிரபு, ஆனந்த்,  வீரபாண்டியன், சத்யராஜ், சதீஷ், பிரசாத் ஆகியோர் இதற்கு ஏற்பாடு செய்திருந்த னர்.  பள்ளிக்கு வந்த தம்பதியி னருக்கு மாணவர்கள் கர வொலி எழுப்பி வரவேற்பு அளித்தனர். பின்னர் 258  மாணவர்களுக்கு சிலேட், பேனா உள்ளிட்ட எழுது பொருள்களை மணமக்கள் வழங்கினர்.