மதுரை,ஆக.11- அனைத்துச்சாதியினரும் அர்ச்ச கர் ஆகலாம் என்ற அரசாணையின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர் நியமனங்களை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம், குமாரவயலூர், சுப்ர மணியசுவாமி கோவிலில் தமிழ்நாடு அரசால் அனைத்துச் சாதியினரும் அர் ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் அடிப்படையில் பிரபு, ஜெயபாலன் ஆகியோர் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனங் களை ரத்து செய்து நீண்ட காலமாக பணியாற்றும் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகிய தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அனைத்துச் சாதியினரும் அர்ச்சக ராகலாம் என்ற சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட இரண்டு அர்ச்சகர் களின் நியமனத்தை ரத்து செய்தும் ஆகம விதிக்கு முரணாக, குமாரவய லூர் கோவிலில் அர்ச்சகர் நியமிக்கப் பட்டுள்ளார் என்றும் இந்த கோவிலில் அர்ச்சகர்களாக (ஐயர்கள்) பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதத்தில் உத்தர விட்டார். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை செயலர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
சட்டங்கள்-தீர்ப்புகளை கவனத்தில் கொள்ளாத தனிநீதிபதி
அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படி அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டுள் ளார் என்பதையும் ஏற்கனவே உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டுள்ளது என்ப தையும் தனி நீதிபதி கவனிக்க தவறி யுள்ளார். மேலும் கோவிலில் ஆகம பூஜைகள் செய்பவர்கள் குறிப்பிட்ட பிறப் பால் சாதி ரீதியான அடிப்படையில் நிய மனம் செய்யப்படவில்லை என்பதை யும் நீதிபதி கவனத்தில் கொள்ள வில்லை அரசால் நியமனம் செய்யப் பட்டவர்கள் முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள். ஆகமங்கள் படி கட்டப்பட்ட கோவில்களில் பூஜை கள் செய்வதற்கு பிராமணர் களான சிவாச்சாரியார்கள் மட்டுமே தகுதியானவர்கள் என ஆகமங்கள்படி கூட எந்த விதியும் இல்லை. ஆதி சைவ சிவாச்சாரியார் சங்கம் சார்பாக தொடரப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கின் உத்தரவுகளையும் நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். கோவில்களில் அர்ச்சகர் நியமனம் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது. இதனை நீதிபதி கவனத்தில் கொள்ள வில்லை. எனவே நீதிபதியின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.