விருதுநகர், மார்ச் 14- நாடு முழுவதும் தலித் மக் கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்தும், வன்கொடுமை தடுப்பு சட் டத்தை முறையாக அமல் படுத்த க்கோரியும், இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக் கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சாத்தூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாரிச் செல்வம் தலைமையேற்றார். கோரிக்கைகளை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் ஞானகுரு, ஆதித்தமி ழர் பேரவையின் அனல் மணி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் விஜயகுமார், நகர செயலாளர் பெத்த ராஜ், மூத்த தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் ஆகி யோர் பேசினர். மாவட்டச் செயலாளர் கே.முருகன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில், மாவட்ட பொருளாளர் எம்.சுப்புராம், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் வி.ஏ.விஸ்வநாத், ஜானகிராமன், உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஆமத்தூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு கே. ராஜேந்திரன் தலைமை யேற்றார். துவக்கி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஊர்காவலன் பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் எம்.சி.பாண்டியன், விருதை வசந்தன், பூவை ஈஸ்வரன் ஆகியோர் பேசினர். முடி வில் மாவட்டத் தலைவர் எம். முத்துக்குமார் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் சிபிஎம் வடக்கு ஒன் றிய செயலாளர் ஆர்.முத்து வேலு, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம். ஜெயபாரத், நகர் செயலா ளர் தீபக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.