சிபிஎம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
சென்னை,செப்.5- அரசுப் பள்ளி சமையலறை சுவர்களில் மலம் பூசி அராஜகம் செய்துள்ள சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எளிய மாணவர் களின் கல்விச்சூழலை சீரழிக்கும் செயலை புரிந்துள்ள கயவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப் பட்டி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் செயல் படும் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி சமையலறை சுவர்களில் மலம் பூசிய அராஜகம் நடந்தேறியுள்ளது. இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாமக்கல் மாவட்டக்குழுக்கள் கண்டித்துள்ளன. இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் 67 பெண் குழந்தைகள் உட்பட 124 பேர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்றனர். இதில் 26 பெண் குழந்தைகள் உட்பட 59 பேர் பட்டியல் இனத்தை சேர்ந்த குழந்தை களும் இஸ்லாமிய சமூகத்தாரின் குழந்தைகளும் படிக்கின்றனர். நான்கு பெண் ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் என ஐந்து ஆசி ரியர்கள் பணியாற்றும் பள்ளியாக உள்ளது. இதே பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலரின் அலு வலகமும் செயல்படுகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் இப்பள்ளியில் உள்ள காலை உண வுத் திட்ட சமையலறை சுவற்றில் மனித மலம் பூசப்பட்டுள்ளது. மேலும் மலத்தினாலேயே ஆண்- பெண் உறுப்புகள் வரையப்பட்டு கரியால் ஏதோ எழுதப்பட்டுள்ள மிக மோச மான சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் அருகில் உள்ள மதிய உணவு சமைக்கும் கூடத்திலும் மலம் பூசப்பட்டுள்ள கொடுமை நிகழ்த்தப் பட்டுள்ளது. இது ஊடகங்களிலும் செய்தித் தாள்களிலும் பரவலாக வெளிவந்துள் ளது. கல்வித்துறை மூலம் காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டு பர பரப்பான சூழல் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதுகுறித்து அறிந்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாமக்கல் மாவட்டத் தலைவர் பி. செல்வராஜ், மாவட்டச் செயலாளர் கி. தங்கமணி, கட்சியின் நாமக்கல் பிரதேசக் குழு செயலாளர் ராஜேந்திரன், பிரதேசக் குழு உறுப்பினர் சிவச்சந்திரன், உள்ளூர் கட்சி கிளைச் செயலாளர் ஜெய ராமன் உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமையன்று பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்து அறிந்தனர்.
தண்ணீர் தொட்டியில் மலம் கழித்து அசுத்தம்
இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே அங்கு நிகழ்ந்துள்ளன என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக இந்த பள்ளி கல்வியாண்டு துவங்கிய சில நாட் களிலேயே இங்குள்ள மாணவர்கள் பயன்படுத்தும் இரண்டு கழிவறை களுக்கு இடையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மலம் கழித்து சிலர் அசுத்தம் செய்துள்ளனர். பள்ளி யைச் சுற்றிலும் நிலவும் சுகாதாரக் கேடுகளும் மாணவர்களின் கல்விச் சூழலைப் பாதிக்கும். எளிய மாண வர்கள் - குறிப்பாக தலித் மாணவர்கள் பயிலும் பள்ளியில் இத்தகைய சம்ப வங்கள் நிகழ்வதும் இது குறித்து தரப்பட்ட புகார்கள் மீது பள்ளி நிர்வாகமும், கல்வி அலுவலர் களும் அலட்சியமாக இருந்திருக் கிறார்கள் என்பதும் அதிர்ச்சியை அளிப்பதாகும். இந்த சம்பவங்கள் நிகழ்ந்த பிறகும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் புகார்கள் அளிக்கப்படாததும் கல்வித்துறையின் கவனத்திற்குக் கூட கொண்டு செல்லப்படாததும் கண்டனத்திற்குரியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்வி அலுவலர் அலுவல கத்தில் நடைபெற்ற பணிகளுக்காக ஜே.சி.பி இயந்திரம் வருவதற்காக, பள்ளியின் தெற்கு பகுதி சுற்றுச்சுவர் 5 மீட்டர் நீளத்திற்கு உடைக்கப்பட் டது. இன்று வரை அது கட்டப்படா மல் இருப்பதும் பாதுகாப்பை பல வீனப்படுத்தி உள்ளது. பேரூராட்சியின் பொறுப்பற்ற அணுகுமுறை இத்தகைய நிலைக்கு உள்ளாட்சி மற்றும் பேரூராட்சித் துறையின் பொறுப்பற்ற அணுகுமுறைகளும் காரணம் ஆகும். பள்ளியின் சமையலறை சுவர்களில் மலம் பூசப்பட்டிருப்பது என்பது அங்கு பயிலும் எளிய மாண வர்களின் கல்விச் சூழல், உடல் நலம், மாண்புமிக்க வாழ்க்கை மீது தொடுக்கப்பட்டுள்ள கடும் தாக்குதல் ஆகும். இது குறித்த விசாரணையை விரைவுபடுத்தி சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை உறுதி செய்ய வேண்டும். இந்த கொடுமையான சம்ப வத்தைக் கண்டித்து பொது மக்க ளை வலுவாக திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து நேரடி நடவடிக்கையில் ஈடுபடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.