districts

img

வடக்கூரில் பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு

தஞ்சாவூர், மே 6-  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம்  வடக்கூர் பாலம் அருகில் அரசுக்கு சொந்த மான ஏரி புறம்போக்கு இடம் உள்ளது. இந்த  இடத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கருங்கல் தென்பட்டு உள்ளது.  பின்னர் அந்த இடத்தை சிறிது தோண்டிய  போது சிலை போன்று இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கிராமத்தில் உள்ள  இளைஞர்கள் சிலை தென்பட்ட இடத்தை முழுமையாக தோண்டிய போது, அங்கு சுமார் 5 அடி உயரமுள்ள அழகிய கருங்கல் லால் ஆன சிவலிங்கம் இருந்ததை கண்டு பிடித்தனர். இந்த சிவலிங்கம் எப்படி இங்கு வந்தது,  எந்த கோயிலைச் சேர்ந்தது, எந்த நூற்றாண் டைச் சேர்ந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ள வரலாற்று ஆர்வலர்களுக்கு கிராமத்தின் இளைஞர்கள் தெரியப்படுத்தி யுள்ளனர்.  வரலாற்று ஆர்வலர்கள் ஆய்வு செய்த  பின்னர் இந்த சிவலிங்கத்தின் முழுமையான  விவரங்கள் தெரிய வரும் என கிராம மக்கள்  தெரிவித்தனர்.