சிவகங்கை,ஏப்.28- வைகை அணை பகுதிகளில் குவிந்து கிடக்கிற வண்டல் மண்ணை அகற்றி சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட விவசா யிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தாண்டியப்பன் சிவகங்கை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தினார். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிஆர்ஒ மணிவண்ணன், விவசாயத் துறை மாவட்ட அதிகாரி தனபாலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், கோட்டாட்சியர் சுகிதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் . இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் பேசுகையில், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வைகை ஆற்று பாசன பகுதிகளில் ஒரு போக தண்ணீ ருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.. இதற்கு வைகை அணைக்கட்டில் 14 அடி உயரத்திற்கு குவிந்து கிடக்கிற வண்டல் மண்ணை அகற்ற வேண்டும். வண்டல் மண் குவிந்து கிடப்பதால் தண்ணீரை தேக்கி வைப்பதில் பாதிப்பு உள்ளது. வண்டல் மண்ணை அகற்றுவோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரி வித்தார். அதனை செயல்படுத்த வேண்டும். கோடை காலத்தில் கண்மாய் ,கால்வாய்க ளை மராமத்துப்பணி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு தொகை யும் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வைகை அணை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் பதிலளிக்கையில், அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி பேசுகை யில், சிவகங்கை மாவட்டத்தில் சிற்றாறு கள்,கண்மாய்களில் வளர்ந்து நிற்கிற கரு வேல மரங்களை அகற்ற வேண்டும். பருத்தி கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆட்சியர், பருத்தி கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். கீழ் நெட்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அய்யாசாமி பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் ஆர்எஸ்பதி மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை ஊக்குவிக்கக் கூடாது. அதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் பேசுகையில், காளையார் கோவில் தாலுகா கருங்காலி கிராமக் கண்மாயின் மூன்று மடைகளும் சேதமடைந்து கடந்த ஆண்டு பெய்த மழைத்தண்ணீர் அனைத்தும் கண்மாயிலிருந்து வெளியேறி விவசாயம் பொய்த்து போய்விட்டது .அதேபோன்று கற்குளம் கிராமத்து கண்மாய் மடை பழு தாகி தண்ணீர் அனைத்தும் வீணாகிவிட்டது. இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுக ளாக பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.