districts

img

தலக்குளம் இரணியல் கூட்டுறவு சங்க வார விழா ரூ.3 கோடி கடன் உதவி; அமைச்சர் வழங்கினார்

நாகர்கோவில், நவ.15- தலக்குளம் இரணியல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்க ளுக்கு தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச் சர் த.மனோ தங்கராஜ் கட னுதவிகளை வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்  தலக் குளம் இரணியல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு சுயதொழில் தொ டங்குவதற்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூட்டு றவு கடன் சங்க வளாகத்தில் செவ்வாயன்று (நவ.15) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்க ராஜ், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் முன்னி லையில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு தொழில் துவங்குவதற்கு கடனுதவி கள் வழங்கி, தெரிவிக்கை யில், தமிழ்நாடு அரசு பெண்க ளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கடனுதவிகள் வழங்கி, கிராமப்புற மக ளிரும் சுயதொழில் தொ டங்கி வாழ்வில் தொழில் முனைவோர்களாக உருவா வதற்கான பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அதன்ஒரு பகுதியாக, இன்று தலக்குளம் இரணி யல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 580 நபர்களைக் கொண்ட 29 சுய உதவிக் குழுவினருக்கு ரூ.3 கோடி  மதிப்பில் தையல் தொழில், ஓலை முடைதல், எம்பி ராய்டரி, தேங்காய் வியாபா ரம், அப்பளம் தயாரித்தல், பூ வியாபாரம் மற்றும் ஊறு காய் தொழில் செய்வதற்காக கடனுதவிகள் வழங்கப் பட்டுள்ளது என்பதை இத்தரு ணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதுபோன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் கடனுதவிகளை சுய உதவிக்குழுக்களில் இணைந்த பெண்கள் அனை வரும் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லாமின், துணைப் பதிவாளர் கு.நரசிம்மன், மேலாண்மை இயக்குநர்  குருசாமி, தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர்கள் கே. செல்லப்பன் பிள்ளை (தலக் குளம் இரணியல்), சந்திரா (லெட்சுமிபுரம்), சங்க செய லாளர் லதா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.