districts

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி, ஜூலை 30- ஜூலை 27-ஆம் தேதி தென்காசி மற்றும் குற்றாலம் பகுதி களில் பலத்த மழை பெய்தது. இத னால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரி ழந்தனர். இதனால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணி கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில், அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல்துறையினர் அனு மதி அளித்தனர்.    அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, உடனே எச்சரிக்கை விடுக்கும் விதமாக அரு விக்கரையில் அபாய ஒலி எழுப்பும் வகையில் அலாரம் கருவி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது செயல்படாமல் உள்ளது. செண்பகாதேவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு தான் மெயின் அருவிக்கு அந்த தண்ணீர் வருகிறது. எனவே அங்கு  கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்ய லாமா? என ஆலோசனை நடை பெற்று வருவதாகவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.