விருதுநகர், மார்ச் 21- அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 11 மாதங்களாக சம்ப ளம் வழங்காததைக் கண் டித்து தற்காலிக செவிலி யர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 8 செவிலியர்கள் தற்காலிக பணியாளர்களாக பணி புரிந்து வருகின்றனர். இவர் களுக்கு கடந்த 11 மாதங்க ளாக சம்பளம் வழங்கப்பட வில்லையென கூறப்படு கிறது. எனவே, இது குறித்து பலமுறை மருத்துவத்துறை உயர் அதிகாரிகளிடம் தெரி வித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இத னால் ஆவேசமடைந்த செவி லியர்கள், தங்களுக்கு உட னடியாக நிலுவை சம்ப ளத்தை வழங்கக் கோரி அரசு மருத்துவமனை வளாகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதா னம் செய்தனர். இதைய டுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.