districts

img

நிதி முறைகேடு செய்து தீண்டாமையை கடைப்பிடித்து வந்ததால் தற்காலிக பணி நீக்கம்

இராஜபாளையம் RA 362 துப்புரவு தொழிலாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய  சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்த  முருகேஸ்வரி சரி வர பணி செய்யாமல் நிதி முறைகேடு செய்து தீண்டாமையை கடைப்பிடித்து வந்ததால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .இந்நிலையில் அத்துமீறி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு  செயல்பட விடாமல் முடக்கியுள்ளார் .இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவில்லிபுத்தூரில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி முத்தையா தலைமை தாங்கினார் . மாவட்ட நிர்வாகி கணேசன் பேசினார். சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.