districts

img

அரசாணை 149-ஐ ரத்துச் செய்ய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியாளர்கள் கோரிக்கை

திண்டுக்கல், ஜூலை 4- ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு வைக்கும் அரசாணை 149-ஐஐ ரத்து செய்ய வேண்டும் என திண்டுக்கல் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் ஒவ்வொருவரும் நான்கு முறை ஆறு முறை தேர்ச்சி  பெற்றவர்களாக இருக்கிறார்கள். 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழை ஆயுள் கால சான்றிதழாக அறிவித்தார்கள். அந்த அடிப்ப டையில் மாநிலம் முழுவதும் 30,000 பேர் மட்டுமே தேர்ச்சி  பெற்றிருப்பார்கள். ஆனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அனைவருக்கும் எப்படிப் பணி வழங்குவது என்று கேட்கி றார்.  தமிழக அரசு தற்போது ஆசிரியர் நியமனம் தொடர்பாக அரசு ஆணை 149-ஐ வெளியிட்டிருக்கிறது. இந்த அர சாணையை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட அரசு ஆணை  177-ஐ அமலாக்க வேண்டும். அரசாணை 149-ஆணை  தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற எங்களை மீண்டும் நிய மனத் தேர்வு வலியுறுத்துகிறது. கடந்த ஆட்சியின் போது  கொண்டு வரப்பட்ட இந்த அரசாணை குறித்து தமிழக  முதல்வர் ஸ்டாலின் பேசும்போது இது மனிதாபிமான மற்ற முறை. நான் ஆட்சிப் பொறுப்பேற்றால் இந்த அர சாணையை ரத்து செய்வேன் என்றார். அந்த அரசாணை யை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே கூடுதலாக ஆசி ரியர்கள் நியமிக்கப்பட்டு விட்டதாகக் கூறி எங்களுக்கு வேலை வழங்காமல் இருந்த நிலையில் தற்போது தற்கா லிக ஆசிரியர்கள் நியமனம் நடைபெறுகிறது. இந்த  13,000 பணியிடங்கள் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி யும் எழுகிறது. எங்களோடு தேர்வு எழுதிய மற்றவர்கள் வேலையில் சேர்ந்து விட்டனர். கடந்த பத்து ஆண்டு களாக எங்களுக்கு வேலை வழங்கவில்லை. இது வரை மூன்று முறை எங்கள் சான்றிதழ் சரிபார்க்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் “ஆரம்பத்தில்” இருந்து என்றால் எப்படி? எனவே அரசு எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளனர்.