districts

img

தேனி, திண்டுக்கல்லில் இறக்குக் கூலி உயர்வு கேட்டு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, மே 8- தேனியில் டாஸ்மாக்  சுமைப்பணித் தொழிலாளர் களுக்கு இறக்குக் கூலியை உட னடியாக உயர்த்தி வழங்க வலி யுறுத்தி தேனி டாஸ்மாக் மேலாளர்  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் மேலாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கிளைத் தலைவர் வி. காளிச்சாமி தலைமை வகித்தார்.  கிளைச் செயலாளர் எஸ்.செல்வ ராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.மோகன் பேசினார். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு  மாவட்டச் செயலாளர் எம்.ராமச் சந்திரன், மாவட்டத் தலைவர் டி. ஜெயபாண்டி ஆகியோர் பேசினர்.  நிர்வாகிகள் பாபு, முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். லிக்கர் பெட்டி, பீர் பெட்டிக்கு ரூ.8 வழங்க வேண்டும். பெட்டிக் குள் பெட்டி ஒன்றுக்கு ரூ.9 வழங்க  வேண்டும். வெளிநாட்டு மதுபானப்  பெட்டிக்கு ரூ.60 வழங்க வேண்டும்.  குடோன் விட்டு குடோன் மாற்றும் பொதுப் பெட்டிக்கு ரூ 15 வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது  திண்டுக்கல்லில் திங்களன்று வேலை நிறுத்தம்-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முள்ளிப்பாடி குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்திற்கு  சிஐடியு கிளைத்தலை வர் முகமதுல்லா தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ்,  முன்னிலை வகித்தார். மாவட்டச்  செயலாளர் கே.பிரபாகரன், சுமைப் பணி சங்க மாவட்டச்செயலாளர் ஏ. பிச்சைமுத்து, மாவட்டப் பொருளா ளர் ஜான்போர்ஜியா, சிஐடியு மாவட்டத் துணைச்செயலாளர் சி.பி.ஜெயசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  பின்னர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மதுபான ஆலை முதலாளிகளிடம் பேசிவிட்டு ஒருவாரத்திற்குள் இறக்குக் கூலி உயர்வு குறித்து முடிவு செய்வதாக கூறியதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது.