districts

img

பஞ்சப்படி நிலுவைத்தொகை வழங்கிடுக! தோல் பதனிடும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜன.7- திண்டுக்கல்லில் தோல் பத னிடும் தொழிலாளர்கள் பஞ்சப் படி நிலுவைத்தொகை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் வத்த லகுண்டு ரோட்டில் உள்ள தோல் வர்த்தகர் சங்க அலுவலகம் முன்பு வெள்ளியன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோல் பதனிடும் தொழிலாளர் சங்க தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சி.பி.ஜெயசீலன், பொருளாளர் தவக்குமார், நிர்வா கிகள் ஜெய்லானி, கண்ணன், ஜோசி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.  ஆர்ப்பாட்டத்தில், 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 4 மாதங் களுக்கான பஞ்சப்படி நிலுவைத் தொகையை அனைத்து தொழி லாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஆண் தொழிலாளர் களுக்கு மாதம் ரூ.338, பெண் தொழிலாளர்களுக்கு ரூ.169 வீதம் கணக்கிட்டு வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக் கும் இ.எஸ்.ஐ., பி.எப், சீருடை உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும். சம்பள பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன.                 (ந.நி)