districts

img

தமுஎகச விருதுநகர் மாவட்ட மாநாடு கருத்தரங்கம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 11-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட 15வது மாநாடு வத்திராயிருப்பில் சனிக்கிழமையன்று துவங்கியது.பொது மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேனி வசந்தன், டாக்டர் பால்சாமி ,தர்மர். சிவபெரு மான், சுந்தர மகாலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். அஞ்சலி தீர்மானத்தை ந. ஜெகன் வாசித்  தார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில துணை பொதுச்செயலாளர் உதயசங்கர் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் காமுத்துரை வாழ்த்திப் பேசி னார் சங்கத்தின் மதிப்புறு தலைவர் ச. தமிழ்ச்செல் வன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி. சுகந்தி, எழுத்தாளர் ஜா.தீபா, முனைவர் கவிஞர் சக்தி ஜோதி ஆகியோர் கருத்துரையாற்றினார். கவிஞர்களின் கவியரங்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தமுஎ கச பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப் பினை க.சி தமிழ்குமரன் வெளியிட ர.ஜீவா பெற்றுக் கொண்டார்.