districts

img

மானாமதுரையில் தமுஎகச முப்பெரும் விழா

  மானாமதுரை, ஜூன் 18-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா மானாமதுரையில் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகதிரவன் தாயார் சண்முகவடிவு படத்திறப்பும்,சிறுகதை எழுத்தா ளர் செல்வகதிரவன் எழுதிய அம்மா புத்தகம் வெளியிட்டு விழா, அம்மா நினைவேந்தல் விழா ஆகிய முப்பெரும் விழா  நடந்தது. இவ்விழாவிற்கு கிளை தலைவர் தேவதாஸ்  தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  செல்வகதிரவன் எழுதிய அம்மா என்கிற சிறுகதை தொகுப்பு புத்தக வெளியிட்டு விழா நடந்தது .இவ்விழாவில் துணை ஆட்சியர் வடிவேலன்,ரெத்தினவள்ளி, மாவட்டத் தலைவர் முனைவர் பேராசிரியர் தங்கமுனியாண்டி, தமிழாசிரியர் திருமாவளவன், மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மாநில குழு உறுப்பினர் ஜீவசிந்தன்,  விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வீரபாண்டி, மிளகனூர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சேவி யர் ஆரோக்கியசாமி ஆகியோர் பேசினர்.  பல்வேறு போட்டி களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்  பட்டன.