மதுரை, ஜூன் 25- திருநெல்வேலியை சேர்ந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தாமிரபரணி ஆறு முழுவதுமாக மாசடைந்த நிலையில் உள்ளது. ஆற்றில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள் ஆகியோர் துணி கள் மாட்டி உயிரிழக்கும் நிலை உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றை குடிநீர் ஆதாரமாகக் கொண்டுள்ள மக்களும், வாழ்வாதாரமாகக் கொண்ட உயி ரினங்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகவே பாப நாசம் கோவிலில் தர்ப்பணம், திதி போன்றவற்றை செய்வதற்கான உள்கட்ட அமைப்புகளை செய்து தருவதோடு, தாமிரபரணி ஆறு அந்த கழிவுகளால் மாசு படு வதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந் தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு முன்பாக செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.
இந்து சமய அறநிலையத்து றையின் தரப்பில் கூறுகையில், “கோவிலுக்கு வரும் பக்தர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மத நம்பிக்கை அடிப்படையிலான செயல்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இயலாது. ஆனால் அவற்றை முறைப்படுத்தலாம். ஆகவே தமிழக மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் செயற்பொறி யாளர், நெல்லை மாவட்ட ஆட்சியர் நிபுணர் குழு அமைத்து, தாமிரபரணி ஆறு முழுவதுமாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.a