சிவகங்கை, ஜூலை 27- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மிதி வண்டி நிறுத்துமிடம் மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்தார். இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை பேப்லிட், மானாமதுரை நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், நகர்மன்ற உறுப்பினர் இந்துமதி திருமுரு கன், திமுக நகர் செயலாளர் பொன்னுச் சாமி, திமுக ஒன்றிய செயலாளர் ராஜா மணி, நகர் அவைத்தலைவர் ரவி,,மாங் குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருக வள்ளி தேசிங்கு ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழரசி எம்எல்ஏ பேசுகையில், பெண்கள் முன்னேற்றத்திற் கான திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் . 2 ஆயி ரம் மாணவிகள் படிக்கக்கூடிய இப்பள் ளிக்கு மிதிவண்டி நிறுத்துமிடம் இல்லா தது பெரிய பிரச்சனையாக இருந்தது. இத னால் மிதிவண்டிகளுக்காக நிறுத்து மிடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்றார்.