districts

img

மோகன ராகத்தில் இசையமைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

திண்டுக்கல், ஜுலை 15- திண்டுக்கல் தாமரைப்பா டியில் உள்ள பண்ணை பார்மசி கல்லூரியில் விர்சு வல் ரியாலிட்டி ஆய்வுக்கூட திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலை வர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு தமிழ்த் தாய் வாழ்த்து இசையமைக் கப்பட்ட விதம் குறித்து அவர் பேசுகையில்,  மனோன் மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எல்லோரும் பாடு வது போல ஒரு நல்ல ராகத்தை தேர்ந்தெடுத்து இசையமைக்க வேண்டும் என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கலைஞர்  கேட்டுக்கொண் டார். எல்லோரும் பாட வேண்டும் என்றால் அது மோகனராகம் தான். அந்த ராகத்தில் இசை அமைக்கி றேன் என்று சொன்ன எம்.எஸ்.வி. அந்த ராகத்தின் ஸ்வரத்தை போட்டுக் காட்டினார். நல்லாயிருக்கு. இதே ராகத்தில் பாட்டுக்கு இசை அமைக்க வேண்டும் என்று கலைஞர் சொன்னார். இதனையடுத்து எம்.எஸ். விஸ்வநாதன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசைஅமைத் தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டு பாட லாக அறிவித்து உத்தரவை பிறப்பித்தார் என்று கூறி னார்.  இந்நிகழ்ச்சியில் இந்திய கைப்பந்து கழக தலைவர் முனைவர் எம். ராமசுப்ர மணி பங்கேற்றார்.  பண்ணை குழுமம் சார்பாக கல்லூரியின் தாளாளர் முனைவர் எம்.கார்த்திகே யன், தர்ஷினி மருத்துவ மனை தலைவர் டாக்டர் திருலோகச்சந்திரன் வீரரா ஜன்,கல்லூரி முதல்வர் முனைவர் வி.கணேசன், கல்லூரி முதன்மை கல்வி அலுவலர் முனைவர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். (நநி)