districts

img

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில், ஜன.22- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சங்கரன் கோவில் அருகே உள்ள மேலநீலத நல்லூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இராமமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் வட்டார தலைவர் சீனிவாசகம், ஆசிரி யர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் துரைப்பாண்டியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெயரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் ஆரோக்கிய ராஜ் வரவேற்று பேசினார். வட்டார துணைச் செயலாளர் திலகர், அலெக்ஸ், வட்டார துணைத் தலைவர் அருண் அமலன், ஸ்டேன்லி  பிரின்ஸ், முன்னாள் செயலாளர் மைக்கேல் ராஜ், மாநில பொதுக் குழு உறுப்பினர் துரைராஜ், புஷ்ப ஜோதி, செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் இலட்சுமி ஆகி யோர் விளக்கிப் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நிறைவுரையாற்றினார். வட்டார பொருளாளர் இராஜம்மாள் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், பணியிடை மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்க ளின் மாறுதல் உத்தரவை ரத்து செய்து பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே அவர்கள் முன்பு பணியாற்றிய பள்ளியில் மீண்டும் பணியமர்த்த வேண்டும், கொரோனா  பெருந் தொற்று காலத்தில் நோய் பரவலை தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் நேரடி பயிற்சி வகுப்புகளை தவிர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.