திருவைகுண்டம் தாமிரபரணி வடகால் பாசனத்திலுள்ள அத்திமரபட்டி, குலையன்கரிசல், பேய் குளம், இருவப்பபுரம் சாலை, சிவத்தையாபுரம்,இறைப்பு மேடு பகுதிகளில் சனிக்கிழமை வீசிய சூறாவளி காற்றினால் பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.