தமிழக வணிகவரி பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொகுதி மேம்பாட்டு நிதி (ரூ.25 லட்சம்), மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதி (ரூ.20 லட்சம்) மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக சங்க உதவியுடன் சுமார் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் மதுரை யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை திங்களன்று நடைபெற்றது. அமைச்சர் பி.மூர்த்தி, சு.வெங்கடேசன் எம்.பி., சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், கூடுதல் ஆட்சியர் எஸ். சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன், யா.ஒத்தக்கடை ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி, திருமோகூர் ஊராட்சித் தலைவர் அண்ணாமலை, யா.நரசிங்கம் ஊராட்சி தலைவர் யு.ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.