இராஜபாளையம், ஜூன் 7- தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனத்தின் 6 ஆவது மாநில மாநாடு விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையத்தில் செவ்வாய்க்கிழமை யன்று பேரணியுடன் துவங்கியது. பேரணிக்கு சம்மேளனத்தின் மாநில தலைவர் பி.சுந்தரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் எம். அசோகன் பேரணியை துவக்கி வைத்தார் .சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன், தையல் கலை ஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலா ளர் எம். ஐடா ஹெலன், துணைப் பொதுச் செயலாளர் சி.மாரிக்கண்ணு ,பொருளாளர் ஆர்.மாலதி , செயலா ளர் வி. சந்திரகலா சிஐடியு மாநில செயலாளர் பி.என். தேவா ,மாநில துணைத்தலைவர் எம். மகாலட்சுமி ,உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு மாநில கன்வீனர் எம். தனலட்சுமி, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் ஜி. கணேசன், செய லாளர் எம். சாராள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.