districts

img

மணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு அணைகள் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

நெல்லை, நவ.6- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி யில் பெய்து வரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  கடந்த 2 நாட்களாக கனமழை பெய்வதால் கடையம் அருகே உள்ள ராமநதி மற்றும் கடனா அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 84 அடி கொள்ள ளவு கொண்ட ராமநதி  6 அடி நீர் இருப்பு அதிகரித்த நிலை யில் மேலும் 2 அடி உயர்ந்துள்ளது.  இதேபோல் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம்  3 அடி உயர்ந்து 61 அடியை எட்டி உள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை 34.50 அடி யை எட்டி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்  டாறு அணை பகுதியில் 18 மி. மீட்டரும், கருப்பாநதியில் 17 மி.மீட்டரும், கடனா அணை பகுதியில் 15 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.  நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி யில் பெய்து வரும் தொடர்மழையால் அந்த அைண களுக்கு வினாடிக்கு 1388 கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, மூலக்க ரைப்பட்டி, பாளை உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை யால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பெரும்  பாலான இடங்களில் நாற்று நடவு பணிகள், தொழி அடித்தல் உள்ளிட்ட பணிகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் கன மழை  பெய்து வருகிறது. இதனால் களக்காடு தலையணை யில் சனிக்கிழமையன்று காலை தண்ணீர் வரத்து அதி கரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்கிறது. இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலை யணையில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் பெரும்பாலான இடங்களில் உப்பளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மாநகர பகுதியில் சாலைகள் சேதம டைந்து காணப்படுகிறது. சூரங்குடியில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச் செந்தூரில் 18 மி.மீட்டரும், கழுகுமலையில் 13 மி.மீட்டரும் மழை  பெய்தது. மேலும் குலசேரகப்பட்டினம், காயல்பட்டினம், வைப்பார், வேடநத்தம், காடல்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.