மதுரை, ஏப்.18- மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மேலூர் தாலுகாவில் உள்ள அம்பலகாரன்பட்டி, கோட்ட நத்தம்பட்டி, வண்ணாம்பாறைப்பட்டி, ஆட்டுக்குளம், பதினெட்டாங்குடி, கொட்டக்குடி, அரசப்பன் பட்டி, பனங் காடி, ஆகிய கிராம ஊராட்சிகளில் ஏப்ரல் 18 செவ்வாய்க்கிழமையன்று திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மக் களை சந்தித்து மனுக்கள் பெற்று உட னடியாக தீர்க்கக்கூடிய பிரச்சனை களை தீர்த்து வைத்தார்.இதற்காக மக் கள் சு.வெங்கடேசன் எம்.பி.க்கு நன்றி, வாழ்த்துக்களை தெரிவித்தனர். அம்பலகாரன்பட்டி கண்மாய், கோட்ட நத்தம் பட்டி ஊராட்சி (புதுப் பட்டி கண்மாய்) ஆகியவற்றில் 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் வேலை முறையாக வழங்கப்படு கிறதா, முறையாக சம்பளம் வழங்கப் படுகிறதா என்பது குறித்து எம்.பி., கேட்டார். அதற்கு பதிலளித்த தொழிலா ளர்கள், வேலை மிக குறைவான நாட் களே வழங்கப்படுகிறது. சம்பளம் 235 வழங்கப்படுகிறது என்று கூறினர். அதற்கு எம்.பி., வட்டார வளர்ச்சி அலு வலர் மற்றும் பணித்தள பொறுப்பா ளரை அழைத்து இந்த ஆண்டு 100 நாட் கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், ரூ.294 ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதற்கான வேலையை பணித்தள பொறுப்பாளர் கள் முறையாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 100 நாள் வேலை அனைவருக்கும் இந்த ஆண்டு கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது. எனவே தொழிலாளர்கள் 100 நாளும் முறையாக சரியான முறையில் வேலையை பார்க்க வேண்டும் என்று தொழிலாளர்களிடம் கூறினார். அம்பலகாரன் பட்டி கண்மாயில் வேலை பார்க்கும் வல்லவன் காலனி யை சேர்ந்த அமிர்தம் என்ற மூதாட்டி, எம்.பி.யிடம் தனக்கு உதவித்தொகை முறையாக வங்கி கணக்கில் வர வில்லை என்றும், கடந்த மூன்று மாதங்க ளாக வங்கிக்கு நடையாக நடந்து பார்த் ததும் வங்கிக்கணக்கில் பணம் ஏற வில்லை என்று கண்ணீர் மல்க கூறி னார்.
இது குறித்து எம்.பி., வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து இந்த பிரச்சனை குறித்து வங்கி அதிகாரிகளி டம் நான் பேச வேண்டும் என்று கூறி னார். உடனடியாக வங்கி அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த மாதம் உதவித்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வேண் டும். தொடர்ந்து முறையாக மாதம் மாதம் இவரது கணக்கில் பணம் வரவு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வங்கி அதிகரிக்கும், வட்டாட்சியருக் கும் உத்தரவிட்டார். புதுப்பட்டி கண்மாயில் நூறு நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குறைகளை கேட்ட பின்பு அங்குள்ள பெண்கள் மற்றும் தொழிலாளர்கள், புதுப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வரு கிறது. ஆனால் காலை 10:30 மணிக்கு மதியம் மற்றும் இரவு கடைசி நேரத்தில் வருகிறது. காலை பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் 8 மணி முதல் 8.30 மணிக்குள்ளே செல்கின்ற னர். இந்த நேரத்தில் பேருந்து இல்லாத தால் மிகவும் சிரமமாக உள்ளது என்று கூறினர். உடனடியாக எம்.பி. போக்கு வரத்து அதிகாரியை தொடர்பு கொண்டு இந்த ஊருக்கு பேருந்து காலை 8 மணிக்கு அல்லது 8.30 மணிக்கு கேட்கி றார்கள். பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் நேரத்தில் பேருந்து கேட்கிறார்கள். உடனடியாக இந்த வாரத்திற்குள் மக்கள் கேட்கிற அந்த 8 மணி முதல் 8.30மணிக்குள் பேருந்து இயக்க வேண்டும் என்று கூறி னார்.
மயானம் கோரி மனு
அம்பலகாரன்பட்டி ஊராட்சி வல்ல வன் காலனியை சேர்ந்த வெள்ளையம் மாள் (82) என்ற மூதாட்டி கண்மாய் கரை களில் பிரேதத்தை புதைத்து வரு கிறோம் நிரந்தர சுடுகாடு அமைத்துத் தர கோரிக்கை வைத்தார். அதற்கு அந்த பாட்டியிடம் உங்கள் ஊரிலிருந்து வேறு யாரும் வர வில்லையா என்று கேட்ட எம்.பி., உங்கள் ஊர் மக்களுக்காக நீங்கள் மனு கொடுக்க வந்தது மிகப் பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார். அதிகாரி களை அழைத்து இதனை ஆய்வு செய்து எவ்வளவு விரைவில் மயானம் ஏற்படுத் தித் தர முடியுமோ செய்து கொடுங்கள் என்று உத்தரவிட்டார். அம்பலகாரன்பட்டி துவக்கப்பள்ளி ஓட்டு கட்டிடமாக உள்ளது. அதனை கான்கிரிட் கட்டிடமாக கட்டித்தரக் கோரி யும், பள்ளிக்கு சுற்றுச் சுவர், கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தரக்கோரி ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரி யர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக் கப்பட்டது. அதற்கு பதில் எம். பி. ஏதே னும் ஒரு திட்டத்தின் மூலம் நீங்கள் வைத்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்வோம் என்று கூறினார். பின்னர் பள்ளியின் பின்புறம் செப் டிக் டேங்க் உடைந்து சரியாக மூடாமல் கிடந்தது. இதனை கண்ட அவர் அதி காரிகளை அழைத்து இரண்டு நாட்க ளுக்குள் இதனை சரி செய்து தர வேண்டும் என்றும் சிறிய குழந்தைகள் படிக்கக்கூடிய இடத்தில் இப்படியா விடுவது என்று அதிகாரிகளை எச்ச ரித்தார்.
கழிப்பறை கட்டித்தர தீர்வு
வண்ணாம்பாறைப்பட்டியில் கழிப்பறை கட்டி தர கோரி கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகளை அழைத்து கேட்டதற்கு ஒரு மாத காலத் திற்கு வேலையை தொடங்கி கழிப்பறை கட்டித் தருவதாக அதிகாரிகள், எம்பி முன்னிலையில் உறுதி அளித்தனர். சலவைக்கூடம் கட்டித்தர கோரிக்கை வைத்தனர். கட்டித் தர ஏற்பாடு செய்வதாக கூறினார். . மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால சந்தர், ஜெய பாலன், மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்துறை, அரசு போக்கு வரத்துத்துறை ஊரகவளர்ச்சித் துறை அதிகாரிகள், மற்றும் பலவேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேருந்து வசதி செய்துதரக் கோரிக்கை
மதுரையில் இருந்து கொட்டகுடி வழியாக சிவகங்கைக்கு பேருந்து வசதி வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதற்கு அரசு போக்குவரத்துக் அதி காரியை அழைத்து உடனடியாக இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கூறினார். அய்யனார் கோவில் முதல் மேல மடை வரை விவசாய பகுதிக்கு சாலை அமைத்து கொடுத்தால் விவசாய பொருட்கள் கொண்டு செல்ல உதவி யாக இருக்கும் என்று கூறினர். பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் வட் டார வளர்ச்சி அதிகாரிகளிடம் எம். பி. கேட்டதற்கு மெட்டல் சாலை விரைவில் அமைத்து கொடுப்போம் விரைவில் என்று கூறினர்.
எம்.பி.க்கு நன்றியும் வாழ்த்தும்
அரசப்பன்பட்டியில் கிராம மக்கள் எம்.பிக்கு நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அரசப்பன்பட்டியில் கிராமத்திற்கு ரேசன் கடை கட்டிடம் பல ஆண்டுகால மாக இல்லை. எத்தனையோ முறை அதி காரிகளிடம் மனு அளித்தும் பலன் இல் லாத நிலையில் ஊராட்சி சார்பில் மனு அளித்த போது உடனடியாக நாடாளு மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து 25லட்சம் மதிப்பீட்டில் தற்போது கட்டப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத் தில் திறக்கப்பட உள்ளது. அரசப்பன் பட்டி மக்கள் சார்பில் சு.வெங்கடேசன் எம்.பி.க்கு நன்றியை தெரிவித்தனர்... தொடர்ந்து பேருந்து சரியாக வரு வதில்லை என பெண்கள் சரமாரியாக புகார் அளித்தனர். அதற்கு போக்கு வரத்துத்துறை அதிகாரியை அழைத்து பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டார். உடனே கிராம மக்கள் கரவொலி எழுப்பி தங்களது நன்றியினை எம்.பி.க்கு தெரிவித்தனர்
மானிய விலையில் நலத் திட்ட உதவிகள்
அம்பலக்காரன் பட்டி, வண்ணாம் பாறைபட்டி, கோட்டநத்தம்பட்டி ஆகிய ஊர்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு மானிய விலையில் தார்ப்பாய், மரக் கன்றுகள், மருந்து அடிக்கும், ஸ்பிரே, சோலார் ஆகியவற்றை பய னாளிகளுக்கு வழங்கிய சு. வெங்க டேசன், 100 நாள் பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அதற்கான அடை யாள அடையாள அட்டைகளை வழங்கி னார். மேலும் பல்வேறு பகுதிகளில் மக் கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வுகண்டார். இந்த நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட் டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாந கர் மாவட்ட செயலாளர் மா. கணே சன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் தாலுகா செயலாளர் எம். கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் மலை. கண்ணன், தாலுகாக்குழு உறுப்பி னர்கள் எஸ்.பி.மணவாளன், வீ.அடக்கி வீரணன், சி.அடைக்கன், ஆனந்த், பன்னீர் செல்வம், பி.எஸ்.ராஜாமணி, திமுக ஒன்றிய செயலாளர்கள் கும ரன், பிரபு மற்றும் ஜெரோம், மாடக்குளம் செல்வராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.