மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். செவ்வாயன்று மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருடன் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.