districts

img

பழனியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மார்ச்.18- இந்திய சுதந்திர போராட்ட வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பாடத்தை நீக்கிய ஒன்றிய பாஜக அரசுக்கு  எதிர்ப்பு தெரிவித்து பழனியில் இந்திய மாணவர் சங்கம்  சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு வெளி யிட்டுள்ள வரலாற்று பாடநூலில் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் பாடத்திட்டத்தை நீக்கி இந்திய வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தேசம் தழுவிய  போராட்ட அறைகூவலின் ஒரு பகுதியாக பழனியில் பழனியாண்டவர் கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச்செயலாளர் தீபக்ராஜ், மாவட்ட இணைச்செயலாளர் மதுமிதா, ஆகியோர் பேசி னர்.                                  (ந.நி.)