மதுரை, ஜன.4- உசிலம்பட்டி அருகே மேல்நிலைப் பள்ளி அருகில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுபானக்கடையை அகற்றக் கோரி ஜனவரி 4 அன்று மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டியில் 5496 என்ற எண் கொண்ட அரசு மதுபானக்கடை இருந்தது. கடந்த வாரம் இந்த மதுக்கடையை தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகில் கரிசல்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது., தினசரி பெருங்காமநல்லூர், காளப் பன்பட்டி, தும்மக்குண்டு. கரிசல்பட்டி உள் ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பள் ளிக்கு வந்து செல்லும் மாணவ - மாணவி களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுபான கடை உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின் றனர். அரசு மதுபானக்கடையை அகற்றக் கோரி ஜனவரி 4 புதன்கிழமையன்று தும்மக்குண்டு கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பதாகை களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவலறிந்து வந்த உசிலம்பட்டி வட் டாட்சியர் கருப்பையா மற்றும் திருமங்க லம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அரசு மதுபான கடையை மாற்ற நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்த னர். இதன்பின்னரே சாலை மறியல் கை விடப்பட்டது.