மதுரை, மார்ச் 18- போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெ ழுத்துக்கள் பெறும் இயக் கத்தை நடத்தி வருகிறது. மதுரை காமராஜர் பல்க லைக்கழக கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இந் திய ஜனநாயக வாலிபர் சங் கம் சார்பில் பல்கலைக்கழக கல்லூரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பேரா. ஏ.டி.செந்தாமரைக் கண்ணன் தலைமை வகித் தார். மாநகர துணை மேயர் டி.நாகராஜன் ,கல்லூரி முதல்வர் எம்.புவனேஸ்வ ரன், துணை முதல்வர் பி. கபி லன், பேராசியர்கள் மா. மணி, வடிவேல் முருகன், வாலிபர் சங்க மாவட்ட பொரு ளாளர் எஸ்.வேல்தேவா ஆகி யோர் பேசினர். பின்னர் மாணவர்கள், பேராசிரி யர்கள் கையெழுத்திட்டனர். மாவட்டச் செயலாளர் டி. செல்வா, தலைவர் அ. பாவெல் சிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.