districts

img

மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தி பாதுகாத்திடுக!

மதுரை, ஜூலை 31-  இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட 13 ஆவது மாநாடு ஜூலை 31 ஞாயிறன்று மூட்டா அரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் க.பாலமுருகன் தலைமை வகித் தார். மாவட்ட துணைச் செயலாளர் பா. சுபாஷ் சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார். ஆர். டான்யா வர வேற்றுப் பேசினார். எஸ்.பி.அபி நயா அஞ்சலி தீர்மானத்தை வாசித்  தார். மதுரை மாநகராட்சி துணை  மேயர் டி. நாகராஜன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் எஸ். வேல்  தேவா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநில துணைத் தலைவர் கண்ணன், மூட்டா மண்டலம் - 1 தலைவர் ரமேஷ் ராஜ்,  மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னி யம்மாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைச் செயலா ளர் ஏ. பிரகாஷ் நிறைவுரையாற்றி னார். சி. டேவிட் ராஜதுரை நன்றி கூறினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக சி. டேவிட் ராஜதுரை, செயலாளராக க.பாலமுருகன், துணைத் தலைவர்களாக அடி செக் பாரதி, சக்தி, துணைச் செய லாளர்களாக பா. சுபாஷ், ராதேஷ் உள்பட 22 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மதுரை காமராசர் பல்க லைக்கழக உறுப்பு கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும். மதுரை மாநகராட்சிக்கு  உட்பட்ட 21 மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தி பாதுகாத்திட வேண்  டும். புதிய கல்விக் கொள்கை மற்  றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.