திண்டுக்கல், பிப்.1- திண்டுக்கல்லில் அரசு சட்டக் கல்லூரி துவங்க வேண் டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மாணவர் சங்கத் தின் திண்டுக்கல் மாவட்ட சிறப்பு பேரவை ஞாயிறன்று திண்டுக் கல்லில் நடைபெற்றது. மாநாட்டுக்கு தீபக்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முகேஷ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பாலாஜி வாழ்த்திப் பேசினார். மாநாட்டில் 21 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட தலைவராக முகேஷ், மாவட்ட செயலாளராக தீபக்ராஜ், மாவட்ட.துணைத்தலைவர் களாக நிருபன், லெனின் மாவட்ட துணைச்செயலாளர் களாக தமிழ்செல்வன், மது மிதா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். சங்கத்தின் மாநில துணை தலைவர் சம்சீர் அக மது நிறைவுரையாற்றினர். பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.