districts

img

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவர் திறமைத் திருவிழா

திருவில்லிபுத்தூர், மார்ச் 19 திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழ கத்தில்  தமிழ் மன்றம் சார்பில் மாணவர்களின்  ”திற மைத் திருவிழா“ - தமிழி – 2023,துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசிஆனந்த் தலைமையில் நடை பெற்றது.துணை வேந்தர் எஸ்.நாரயணன்,பதி வாளர்.வே.வாசுதேவன் முன்னிலை வகித்தனர். “மஞ்சப்பை” திரைப்பட புகழ் கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன் சென்னை , ”பிளாக்ஸிப்”  திரைப்பட புகழ்  நடிகர் நரேந்திர பிரசாத், திருச்சி காவேரி கல்லூரி  பேராசிரியர் சீ.சதீஸ்குமார் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். மாணவர் நல இயக்குநர் எம்.முத்துக் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்.  முன்னதாக தமிழ் மன்றத் தலைவர் பேராசிரியர் சி.சங்கீதா வரவேற்றார்.  247 தமிழ் எழுத்துக்களால், மாணவர் நவீன் வரைந்த நிறுவனர் கலசலிங்கம் திருவுருவ எழுத்தோ வியத்தையும், மாணவி அழகு மீரா எழுதிய ”பாரதி யார் புதுமைப் பெண் ”கவிதை நூலையும் சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். தமிழ் மன்ற வளர்ச்சியில் ,ஈடுபட்ட சிறந்த மாண வர்களுக்கு ”சகலகலாவல்லவன்” என்ற சான்றி தழையும் வழங்கி சிறப்பு விருந்தினர்கள் தமிழில் பெரிய பலகையில் கையெழுத்திட்டு ”தமிழில் கையெழுத்து” இயக்கத்தை துவக்கி வைத்தனர். முன்னதாக மாணவி சுபஸ்ரீயின் வரவேற்பு நாட்டியம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மாணவ ஒருங்கிணைப்பா ளர்கள் பிரபு,அருணேஸ்வரி மற்றும் தமிழ்மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.