districts

img

‘திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்’

தூத்துக்குடி, மே 15  தூத்துக்குடியில் திருக்  குறளை தேசிய நூலாக அறி விக்கக்கோரி 133 திருவள்ளு வர் படங்களை காகிதத்தட் டில் ஓவியமாக வரைந்து பள்ளி மாணவன் உலக சாதனை படைத்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த தனுஷ் டார்வின் என்ற பள்ளி மாணவன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். தூத்துக்குடி சுப்பையா புரம் பகுதியில் வசித்து வரு பவர்கள் ஆல்வின் - முத்து லட்சுமி தம்பதியர். இவர் களது மகன் தனுஷ் டார்வின், தூத்துக்குடி சிதம்பரம் நக ரில் உள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி யில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் உடைய இவர், பல்வேறு ஓவிய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற் றுள்ளார். இந்நிலையில், திருக் குறள் மீது கொண்ட பற்றால்  அதனை தேசிய நூலாக அறி விக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், 133 அதி காரங்கள் உள்ளதால் 133 திரு வள்ளுவர் படங்களை 133 காகித தட்டில் ஓவியமாக வரைந்தார். இரண்டு மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்து முடித்தார். புதுச்  சேரியில் உள்ள ஆல் இந் தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணையதளம் மூலம் இவரது சாதனையை பதிவு செய்தது. இந்த சாதனை நிகழ்ச்சிக் குப் பின்னர் தான் ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்டாக வர வேண்  டும் என்பதே தமது விருப்பம் என்று மாணவன் தனுஷ் டார்  வின் கூறினார்.